tamilnadu

img

சிஐடியு நடைபயண பிரச்சாரம் துவங்கியது

7 முனைகளில் இருந்து திருச்சியை நோக்கி பயணம்

திருவள்ளூர், மே 20- குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க மாநில அரசும், ஒன்றிய  பாஜக அரசும்சட்டம் இயற்ற வேண்டும்  உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு நடத்தும் நடை பயண பிரச்சாரம் தமிழகத்தின் 7 முனை களில் இருந்து சனிக்கிழமை (மே 20)  தொடங்கியது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை தடை செய்யவேண்டும், தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் நலன் பாது காக்கும் வகையில் முத்தரப்பு குழுக் களை செயல்படுத்தவேண்டும், தொழி லாளர் சட்ட தொகுப்புகளை கைவிட  வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்  தம், மின்சார விநியோக சட்ட திருத்தம் 2022 திரும்பப் பெறவேண்டும், அரசுத்  துறைகளில் உள்ள காலிப் பணிகளை  நிரப்ப வேண்டும், அங்கன்வாடி, ஆஷா,  மக்களை தேடி மருத்துவம், என்சிபி எல்பி போன்ற திட்ட ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண் டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயண பிரச்சா ரம் நடைபெறுகிறது. 

வடசென்னை 

வடசென்னை மாவட்டம் திரு வொற்றியூரில் இருந்து புறப்பட்ட சிஐ டியு மாநில நிர்வாகி எம்.தனலட்சுமி தலைமையிலான நடைபயண  பிரச்சா ரக் குழுவை சிஐடியு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தொடங்கிவைத்தார். மாவட்டத் தலைவர் எஸ்.கே. மகேந்தி ரன், செயலாளர் எஸ்.  லெனின் சுந்தர்,  ஜெயராமன் எம்சி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  இந்த குழுவினர் மத்திய சென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்க ளில் 10 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்  காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அரு கில் சிஐடியு மாநில உதவி பொதுச்  செயலாளர் எஸ்.கண்ணன் தலைமை யில் மற்றொரு  நடைபயண பிரச்சாரம் துவங்கியது.   திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர்,  திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்   ஆகிய 7 மாவட்டங்கள்  வழியாக திருச்சி யை மே 30 அன்று சென்றடைகிறது. இந்த  பயணக் குழுவில் சிஐடியு திருவள்ளூர்  மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட் டச் செயலாளர் கே.ராஜேந்திரன், காஞ்சி புரம் மாவட்ட நிர்வாகிகள் ஜெனிட்டன், கார்த்திக்,  ராணிப்பேட்டை மாவட்ட நிர்  வாகி தேவபதி, ஞானமுருகன், ரமேஷ், வேலூர் மாவட்டச் செயலாளர் பரசு ராமன், துணை நிர்வாகிகள் சிலம்பர சன், ராஜா, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பாரி, பெரம்ப லூர் மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர் களுடன் ராணிப்பேட்டை நவயுகா கலைக் குழுவும் பயணிக்கிறது.

கடலூர்

கடலூரில் தொடங்கிய நடைபயண பிரச்சாரத்திற்கு சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் சி.ஜெயபால், கடலூர் மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் எம். கண்ணன், திரு வாரூர் மாவட்டச் செயலாளர் டி. முரு கையன், நாகை மாவட்டச் செயலா ளர் கே, தங்கமணி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. மாரியப்பன், அரியலூர் மாவட்டச் செயலாளர் பி.  துரைசாமி,  கடலூர் மாவட்டத் தலைவர்  பி. கருப்பையன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார குழு காவிரி டெல்டா  மாவட்டங்கள் வழியாக பிரச்சாரம் செய்து மே30 ஆம் தேதி திருச்சியை அடைய உள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் களி யக்காவிளையில் சிஐடியு மாநில உதவிப் பொதுச் செயலாளர் வி.குமார்   தலைமையில் சனிக்கிழமை தொடங் கிய நடை பயணப் பிரச்சாரத்தை சிஐ டியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லச்சாமி வாழ்த்தி வழி அனுப்பி  வைத்தார். பிரச்சாரப் பயணத்தில் மாநில நிர்வாகிகள் கே.தங்கமோகன், பி. சிங்காரன், எம்.சிவாஜி, ஆர்.எஸ்  செண்பகம், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஆர்.முருகன், ஆர்.பேச்சி முத்து, கிருஷ்ணவேணி, சந்திரகலா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  களியாக்காவிளையில் காவல் துறையினர் நடைபயணத்திற்கு அனு மதியில்லையெனக்கூறி அனைவரயும் கைது செய்யும் நடவடிக்கையை மேற்  கொண்டனர். எனினும் காவல்துறை யின் தடையைப் பொருட்படுத்தாமல் நடைபயணம் புறப்பட்டது.

செங்கோட்டை

தென்காசி மாவட்டம் செங்கோட் டையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், மாநி லச் செயலாளர் பி.என் தேவா ஆகி யோர் தலைமையிலான நடைபய ணத்தை மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு துவக்கி வைத்தார். பய ணக்குழுவில் சிஐடியு மாநிலத் துணைச் செயலாளர் எம் மகாலட்சுமி, மாநி லக்குழு உறுப்பினர் ஜி.கௌரி (மதுரை  புறநகர்). லூர்துரூபி (மதுரை மாநகர்),  ராமச்சந்திரன் (தேனி), பாலசுப்பிரமணி யன் (திண்டுக்கல்) உட்பட ஏராளமா னோர் பங்கேற்றுள்ளனர்.  முன்னதாக பயணக்குழுவினர் செங்கோட்டையில் உள்ள வீர வாஞ்சிநாதன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி னர். 

கோயம்புத்தூர்


கோவை ஆவாரம்பாளையத்தில் வெள்ளியன்று பொதுக்கூட்டத்துடன் துவங்கிய நடைபயண இயக்கத்திற்கு,  சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி வரவேற்புரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நடைபயண சிஐடியு கொடியை எடுத்துக்கொடுத்து சிறப்புரையாற்றினார். இதில், சிஐடியு மாநில துணை தலைவர்களான எம்.சந்திரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் நடைபயண இயக்கத்தை வாழ்த்தி உரையாற்றினார். முன்னதாக நடைபயண இயக் கத்தில், சிஐடியுவின் திருப்பூர், ஈரோடு,  நீலகிரி, கரூர், திருச்சி புறநகர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாவட்டச் செய லாளர்கள் பங்கேற்றனர். கணபதியில் துவங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணமாக பிரச்சா ரம் மேற்கொண்டது.